சுகாதார அமைச்சரால் ரணிலின் கோரிக்கை ஏற்பு!!

 


கொரோனா பரவல் சம்பந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்வைத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.

இவ்வாறான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதன் ஊடாக, நாட்டின் கொரோனா நிலைமைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இதனை வரவேற்ற சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி, கொரோனா சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிப்பதைவிட இது சிறந்ததாக அமையும் என்று தெரிவித்தார்.

அத்தோடு, கொரோனா பரவல் சம்பந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.