இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டகலையில் கடைகள் பூட்டு!!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக, நுவரெலியா- கொட்டகலை பிரதேசத்திலுள்ள அனைத்து கடைகளையும் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடுவதற்கு கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு கொட்டகலையிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலையின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை மற்றும் நகரத்தில் பல கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளமை ஆகியவைகளை கவனம் செலுத்தியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளன.
மேலும் கொட்டகலை நகரத்தின் அனைத்து பகுதிகளையும் கிருமி நீக்கம் செய்து, சுத்தம் செய்யவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதேச சபை குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை