மட்டக்களப்பில் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்!!

 


மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இன்று புதன்கிழமை (18) காலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை சுமார் 7 மணியளவில்  மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது அங்கு சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் துப்பாகக்கிபிரயோகம் நடாத்தியுள்ளனர்.

  சம்பவத்தில் மண்அகழ்வில் ஈடுபட்ட 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே   படுகாயமடைந்துள்ளார் .

படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர். 

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.