மட்டக்களப்பில் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்!!
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று புதன்கிழமை (18) காலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை சுமார் 7 மணியளவில் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது அங்கு சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் துப்பாகக்கிபிரயோகம் நடாத்தியுள்ளனர்.
சம்பவத்தில் மண்அகழ்வில் ஈடுபட்ட 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே படுகாயமடைந்துள்ளார் .
படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை