இலங்கைக்குள் நுழைந்த சுற்றுலாப் பயணிகள்!!


 இலங்கையில் கொரோனா தொற்றினால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ள நிலையில், ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சமூக வலைத்தளப் பக்கத்தில் இன்று பதிவிட்டிருக்கின்றார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மிகவேகமாக சரிவடைந்துவருவதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் சுகாதாரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், விசா நடைமுறைகளையும் தளர்த்தியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.