வெளி நாடுகளிலிருந்து வருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!!
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் வைத்தே பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது நிலையத்தில் அவர்கள் தங்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள், பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளாத ஒருவர், பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டாலும், கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை