இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்- தமிழக முதல்வர் ஸடாலின்!


 தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தள்ளார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு அடுப்பு, மற்றும் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இது உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள 7 ஆயிரத்திற்கும் அதிகமான பழுதடைந்த வீடுகள் 231 கோடி ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.