சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி!!


சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் நிலை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இரண்டாவது தடுப்பூசியை பெற்று 5 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.