மூன்றாவது தடுப்பூசி குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு!!

 


நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் முதல் கட்டத்தில் மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கு பின்னர் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.