வவுனியா தலைமை தபால் சேவைகள் முடங்கும் அபாயம்!
வவுனியா தலைமை தபால் நிலையத்தில் தபால்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவல் காரணமாக தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் கொழும்பில் இருந்து வடமாகணத்திற்கு அனுப்பப்படும் தபால்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் பெற்று கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த தபால்கள் அனுராதபுரத்திற்கு அதிகாலை 2 மணிக்கு கொண்டு வரப்படுகின்றது. அவற்றை யாழ் தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தில் எடுத்து வரப்பட்டு வவுனியாவிற்கு வழங்கப்படுகின்றது.
இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன். காலை 6 மணியளவிலேயே வவுனியா தபால் அலுவலகத்திற்கு கடிதங்கள் கிடைப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை