தாய்லாந்தில் கொரோனா பலத்த அதிகரிப்பு!!
தாய்லாந்தில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனா்.
இது நாட்டில் பதிவாகிய அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு எண்ணிக்கையாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 68 ஆயிரத்து 957ஆக உயா்ந்துள்ளது.
இவர்களில் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 334 போ் தொடா்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனா். என்பதுடன், அவா்களில் 5 ஆயிரத்து 615 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை