அரசாங்கத்தின் மீது சஜித் குற்றச்சாட்டு!!

 


நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் இத்தகைய நடவடிக்கை அரசாங்கத்தின் பிடிவாத அணுகுமுறையை தெளிவாகக் காட்டுகின்றது என்றும் கூறினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச இவாறான செயற்பாடுகள் மூலம் அப்பாவி மக்களின் வாழ்க்கையில் அரசாங்கம் விளையாடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

சந்தையில் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும், எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் எரிபொருளை இறக்குமதி செய்வதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா பரவுவல் உச்சத்தை எட்டியுள்ள நேரத்தில், தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் படிப்படியாகவும் வெற்றிகரமாகவும் மக்களை பெரும் பேரிடரை நோக்கி தள்ளுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.