விபத்தில் சிக்கிய பெண் யாழில் உயிரிழப்பு!!

 


யாழ்.கொடிகாமம் பகுதியில் விபத்துக்குள்ளான பெண் ஒருவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 கொடிகாமம் தொடருந்து நிலையைத்தினை அண்மித்த பகுதியில் நேற்று மாலை மிதி வண்டியில் பயணித்த குறித்த பெண் மீது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பின்பக்கத்தால் மோதியுள்ளது.

 சம்பவத்தில் மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான பெண் சாவகச்சேரி தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.