சாக்கடையில்தான் மலரும்: நடிகர் சித்தார்த் காட்டம்

 


ட்விட்டரில் நீட் தேர்வு குறித்த ஒருவரின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் காட்டமாக பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது.

இதையொட்டி, ட்விட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்தை டேக் செய்து நீட் தேர்வு நடந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் காட்டமாக ட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த் பதிவிட்டது:

“மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன். பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். எழவு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.