நாயன்மார்கட்டு குளத்தின் வரலாறு.!
ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கை ஆரிய ச்சக்கரவர்த்தியினால் இக்குளம் அமைக்கப்பட்டது. விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி இளைப்பாறிச் செல்வதற்கு இக்குளத்தின் நடுவில் ஒரு நீராழி மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
1942 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் இக் குளத்தினை ஆழமாக கிண்டியபோது ஓர் கல்வெட்டு சிலாசாசனம் கிடைக்கப்பெற்றது. இவ் கல்வெட்டில் "கலி 3625 ல் சிங்கையாரியனல் பெருமானுக்கு தீர்த்தம் கொடுக்க இத்திருக்குளம் வெட்டப்பட்டது"
என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதன சாலையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பரராசகேசர மன்னனின் மருமகனாகிய மகாவித்துவான் அரசகேசரி என்பவரால் இக்குளத்தின் நடுவில் அமைந்திருந்த நீராழி மண்டபத்தில் இருந்து இரகுவம்சம் என்னும் வடமொழிக் காவியத்தை இனிய தமிழில் பாடினார் என்ற வரலாறும் இக்குளத்திற்க்கு உள்ளது.
நான் மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் என்னுடைய முதலாவது பிரேரணை இக்குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த ஆழியினை மீள அமைத்தல் என்பதேயாகும்.
கருத்துகள் இல்லை