மரணத்தண்டனைக்கு பயன்படுத்தப்பட்ட அரங்குகள் தற்போது கிரிக்கெட்டுக்கு


 தலிபான் நாட்டில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

புதிய இஸ்லாமிய சட்டத்தின் கீழ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு தலிபான்கள் வெளியேற்றப்பட்டதற்கு முன்னர் விளையாட்டு போட்டிகள் பலவற்றுக்கு தடை விதித்திருந்தனர்.அதேபோன்று அரங்குகள் போன்றவை பகிரங்கமாக மரணத்தண்டனை வழங்கவே தலிபான்கள் பயன்படுத்தியிருந்தனர்.

கடும் இஸ்லாமியவாதிகள் கிரிக்கெட்டில் ஈடுபாடு காட்டுவதில்லை.ஆனாலும் தலிபான் போராளிகள் பலர் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

குறைந்தளவான சட்டங்களையே அமுல்படுத்தப்படும் என கடந்த மாதம ஆப்கானை கைப்பற்றிய போது தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட்டில் டெஸ்ட் போட்டி நவம்பர் 27 தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது கடந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.கொவிட் தொற்றினால் சர்வதேச பயணத்தடை காணப்பட்டமையினால் நடத்த முடியாது போனது.

அவுஸ்திரேலியாவில் ஆப்கான் விளையாடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.