தனி வழியில் பயணிக்கும் வடகொரியா!

 


பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


எனினும் தடுப்பூசிகள் வேண்டாம் என வடகொரிய அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மேலும் அவர் “கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலை சமாளிக்க போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது” என உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. கொரோனா பரவலால் வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எனினும் தங்கள் நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று வடகொரியா தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால், அதை வல்லுநர்கள் ஏற்க மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.