கட்டுத்துப்பாக்கி வெடித்து அனுராதபுரத்தில் இருவர் பலி!!

 


அநுராதபுரம்- முரியாகல்ல பகுதியில் மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மூவர் குறித்த பகுதியில் சென்றுக்கொண்டிருந்த வேளையில், இருவர் மீது துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  ஊர்மக்களுக்கு அதனை தெரியப்படுத்துவதற்காக சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.