பொலிஸாரினால் கொடூரமாக தாக்கப்பட்ட மட்டக்களப்பு சகோதரர்கள்!

 


மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் வைத்து கடந்த 5 ஆம் திகதி இரவு 8 மணியளவில் வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப் பட்டுள்ளது.


அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே மோட்டார் வாகனத்தை நிறுத்தி துப்பாக்கியால் சராமாரியாக முகத்தில் தாக்குதல் நடத்தப்படுள்ளது.

காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் நாட்டில் தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.