பேருந்துகளில் அடுத்த மாதம் முதல் இது கட்டாயம்!


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை இல்லாதவர்களை பேருந்துகளில் ஏற்றுவதை நிறுத்துவதற்கு அடுத்த மாதம் முதல் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி மேல் மாகாணத்தில் இந்த புதிய சட்டம் அமுல் படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் மற்றும் சட்டம் சரியாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க அதி காரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மாகாண பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையைத் தாம் கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் பஸ்களில் ஏறும் போது தடுப்பூசி செலுத்தி அட்டையைச் சரிபார்ப்பதற்கு நடத் துனருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.