யாழில் மேலும் 5 கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

 


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட வரணியில் 98 வயதுடைய பெண் ஒருவரும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் வீட்டிலேயே உயிழந்துள்ளனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய முதியவர் ஒருவரும் அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரும் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 248ஆக உயர்வடைந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.