இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 17 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 798 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்து 32 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் புதிதாக 281 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 44 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 40 ஆயிரத்து 639 பேர், இந்தியாவில் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.