மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைவு!!

 


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 1,260 பேர் குணமடைந்துள்ள நிலையில் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 431,036 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் தற்போது 57,798 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று புதிதாக 2,070 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 500,772 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் 11,938 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.