ஊரடங்கை 21ஆம் திகதிக்குப் பின்னர் நிறுத்த முடிவு!!


 வரும் 21ஆம் திகதி ஊரடங்கானது முடிவுக்கு வரும் நிலையில் அதன் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது வரும் 21ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.

அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்கும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

இந்நிலையில் அவர் அமெரிக்கா செல்லும்முன் நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.