ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு கோரிக்கை!!

 


நாட்டில் தற்போதைய கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்க எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை மிகக் கடுமையான முறையில் செயற்படாவிட்டாலும் தற்போது நடைமுறையியேலே எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நீடிப்பது சிறந்தாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.