ஊரடங்கை மீறி பயணித்தோர் மீது நடவடிக்கை!!


 யாழில் ஊரடங்கை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பணத்தடையினை மீறி பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பதோடு வீதிகளில் சுகாதார நடைமுறையினை பிற்பற்றாது வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் தொற்று பரவல் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் அதனை தடுக்கும் முகமாக இன்று காலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கோப்பாய் பொலிசாரினால் விசேட சுற்று காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசிய சேவை தவிர்ந்து வீதியில் பயணித்தோர் மற்றும் பயணத்தடை வேளையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வீதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுப்டோரின் விபரங்கள் பொலிசாரினால் சேகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை யாழ்.நகரிலும் இராணுவத்தினர் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.