மின்னல் தாக்கி யாழில் ஒருவர் உயிரிழப்பு!!

 




யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயலில் உழவில் ஈடுபட்டபோது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.