பரீட்சைகள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் முக்கிய கோரிக்கை!!

 


அரசாங்கம் மாணவர்கள் கற்பதற்கான உரிய சூழலை ஏற்பத்திய பின்னரே க.பொ.த.உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றினை நடத்துவதற்கு நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், க.பொ.த  உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றது.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் கல்வியினை நாற்பது வீதமான மாணவர்களே பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஏனைய அறுபது வீதமான மாணவர்களுக்கு இது கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் இந்த மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தயாராகுவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமல், அரசங்கமானது பரீட்சைகளை நடத்துவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

சரியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் பரீட்சைக்கு தயார்ப்படுத்தி, அவர்கள் பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற சூழல் சரியான முறையில் கிடைத்த பின்னரே, இந்த பரீட்சைகளை நடத்தவேண்டும் என்கின்ற கோரிக்கையினை நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.