இன்னுமொரு அரச நிறுவன தலைவர் பதவியை இராஜிநாமா செய்தார்!!

 


இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவர், தனது இராஜினாமா கடிதத்தை அவர் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அவர் பதவி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை அண்மைய நாட்களில் இராஜினாமா செய்த அரச நிறுவனங்களின் இரண்டாவது தலைவர் இவர் ஆவார்.

கடந்த வாரம், தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் ஜெனரல் இஷினி விக்ரமசிங்க, தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.