வன்முறை கும்பல் யாழில் வீடு புகுந்து அட்டூழியம்!!

 


யாழ்.தென்மராட்சி - வரணி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 6 மணிக்கு வரணி இயற்றாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஊரடங்கு அமுலில் உள்ளநேரத்தில் பருத்தித்துறை வீதி வரணியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் பொல்லுகளோடு சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த கும்பல் அத்துமீறி வீடு புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் அவரது தொலைபேசியையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளதுடன் ஏனையோரை வலைவீசித் தேடிவருகின்றனர். 

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.