இரட்டை கோபுரத் தாக்குதல் – பைடனின் உத்தரவு!

 


நியூயோர்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினா் நடத்திய விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு நீதித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அந்த ஆவணங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும்.

இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்த 2 ஆயிரத்து 977 பேரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவித்தார்.

நியூயாா்க் நகரில் இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11ஆம் திகதி தாக்குதல் நடத்தினா்.

பயணிகள் விமானங்களைக் கடத்தி அந்தக் கட்டடத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட அந்த கோரத் தாக்குதலில் 2 ஆயிரத்து 977 போ் உயிரிழந்தனா்.

தாக்குதலின் 20ஆவது ஆண்டு நினைவுதினம் இன்னும் சில நாட்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.