கொரோனாவால் யாழில் இளம் ஊடகவியலாளர் மரணம்!!
கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார்.
அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்தார். மாற்று திறனாளியான அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது, வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாரை திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராடி வந்த இளம் ஊடகவியலாளர் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை