பாரதி நினைவுகள் - கவிதை!!

 


சொல்லுக்கு

மகுடஞ் சூட்டிச்

சுதந்திரங் கொடுத்தவன்

******

கம்பீர மீசையைக்
கவிதையில் வளர்த்து
அழகு பார்த்தவன்

******

சொற் குண்டுகள் வீசி
வெள்ளையர் மனக் கோட்டையைத்
தகர்த்தவன்

******

புதியன பாடியும்
வேட்டுக் கவிதை யாத்தும்
மகாகவி ஆனவன்

******

பாரதத்தின் புதல்வரென
பாரத விலாசம்
காட்டியவன்

******

தனியொருவன்
பசியென இருப்பின்
சகத்தினை அழிக்க
ஆவேசமூட்டியவன்.
******

காண்பதெலாம் பெருங் கனவோ
எனத் தத்துவம்
பார்த்தவன்

******

எத்தனை கோடி இன்பம்
இப்பூமியில் என்று
எம் கண்ணில் சேர்த்தவன்

******

ஆனந்தச் சுதந்திரம்
அடைவதைத்
தீர்க்கதரிசியாய்
எமக்குக் காட்டியவன்

******

பாரதி நீ
வெறுங்கவி அல்ல
மண்ணின் பெருங்கவி
இப்பிரபஞ்சத்தின்
மகாகவி.

- இளவல் ஹரிஹரன், மதுரை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.