இயக்குநர் ஷங்கர் ராம் சரணுக்கு போட்ட கண்டிசன்!!


 ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி15 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் மற்றும் ஆச்சார்யா படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கெண்டு வருகிறாராம் ராம்சரண். காரணம், தனது படத்தில் நடிக்க வந்தபிறகு படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று ராம்சரணுக்கு கண்டிசன் போட்டுள்ளாராம் ஷங்கர்.


அதன்காரணமாகவே ஏற்கனவே நடித்துவந்த இரண்டு படங்களின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்து விட்டு அதன்பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தி நடிக்க திட்டமிட்டுள்ள ராம்சரண், புதிதாக தான் நடிக்கயிருந்த இன்னொரு தெலுங்கு படத்தையும் தள்ளி வைத்து விட்டாராம்.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தை குறுகிய காலத்தில் படமாக்கி முடித்து விட்டு அடுத்த ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதால் ராம்சரண் மட்டுமின்றி, இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளுக்கும் இதே கண்டிசனை போட்டுள்ளாராம் ஷங்கர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.