விவாகரத்து செய்கிறாரா சமந்தா - மாமனாரின் முடிவு!!

 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா திடீர் என்று தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவர் குடும்பத்து பெயரை நீக்கிவிட்டார். அதை பார்த்தவர்கள் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என்று பேசத் துவங்கினார்கள்.

பிரச்சினை பெரிதாகி நாக சைதன்யா சமந்தாவைப் பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனாவின் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



நாகர்ஜூனா தற்போது பிக் பாஸ் 5 தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் துவக்க நிகழ்ச்சியை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் நாகர்ஜுனாவோ செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் தான் செய்தியாளர்களை அவர் தவிர்த்ததாக கூறப்பட்டது. ரசிகர்கள் அந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை.

செய்தியாளர்களை சந்தித்து, சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பேச்சு வெறும் வதந்தி என்று நாகர்ஜுனா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டுஅவர் செய்தியாளர்களை தவிர்ப்பதை பார்த்தால் பிரச்சனை இருக்கிறது போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

சமந்தா, நாக சைதன்யாவின் 4வது திருமண நாள் அடுத்த மாதம் வருகிறது. அப்பொழுதாவது விவாகரத்து குறித்து அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.