மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை ரத்து!!

 


நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை ஒக்டோபர் மாதம் முதல் கட்டம் கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசெம்பர் மாத விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.