உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?


ஒரு முறை முல்லா தன் வறுமையைக் கூறி மன்னரிடம் ஏதாவது பரிசு பெற்று வரலாம் என்று அரச சபைக்குச் சென்றார்.

மன்னர் முல்லாவைப் பார்த்து , " நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்குச் சரியான பதில் தந்தால்தான் பரிசு" என்றார்.

அதற்கு முல்லாவும் சம்மதித்தார்.

முன்னர் தன் முதல் கேள்வியைக் கேட்டார்.

"என் உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை? "

முல்லா, " என்னைப் போன்ற ஏழைகளுக்குப் பரிசளித்துப் பரிசளித்து உங்கள் உள்ளங்கைகளில் முடியில்லை " என்றார்.

உடனே மன்னர், " உன் உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

"உம்மைப் போன்ற வள்ளல்களிடமிருந்து பரிசுகளாகப் பெறுவதால் என் உள்ளங் கைகளில் முடியில்லை" என்றார்.

திருப்தியடைந்த மன்னர் கடைசியில்,

"இந்த அவையிலிருப்பவர்கள் உள்ளங் கைகளில் முடியில்லையே ஏன்? " என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

முல்லாவும் விடுவதாக இல்லை. "உம் வள்ளல் தன்மையைப் பாராட்ட கைகளைத் தட்டியே மகிழ்ந்து கொண்டிருப்பதால் இவர்கள் உள்ளங் கைகளிலும் முடியில்லை." என்றார் சாதுரியமாக.

முல்லாவின் அறிவுத் தன்மையை வியந்த மன்னர் ஏராளமான பரிசுகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.