சதொசவின் மூலம் ஒருவருக்கு 5 கிலோ சீனி!!

 


சதொச ஊடாக 5 கிலோ சீனியை மக்கள் கொள்வனவு செய்ய முடியும் என சதொசவின் தலைவரான ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை 3 கிலோகிராம் சீனியை மாத்திரமே ஒரு வாடிக்கையாளருக்கு விற்க அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் தற்போது அது 5 கிலோகிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் 5 பேர் மாத்திரமே சதொச விற்பனை நிலையங்களில் அனுமதிக்கப்படுவதால் சீனியைக் கொள்வனவு செய்ய வரும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் போதுமான அளவு சீனி விநியோகிக் கப்பட்டுள்ளது என அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளரான செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதுமான அளவு சீனி இருப்பு உள்ளதாக தெரிவித்த அவர், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தொலைதூர பகுதிகளிலுள்ள சில கடைகளுக்கு சீனியை விநியோகிப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம் எனவும் கூறினார்.


Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.