எனது முதல் பணி தமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் - புதிய ஆளுநர்!!

 


உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் எனது முதல் பணியென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஆர்.என்.ரவி மேலும் கூறியுள்ளதாவது, “என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக உழைக்க  எண்ணியுள்ளேன.

அத்துடன் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது.

அதாவது, அரசியல் அமைப்பு கொடுத்துள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் எனது பணிகள் இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.