பெண்ணொருவரால் பிரதேச சபை தவிசாளரின் மூக்கு அறுப்பு!!

 


பிரதேச சபை தவிசாளர் ஒருவரை வழிமறித்து பெண்ணொருவர் மூக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (04) தெரணியகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவர், தெரணியகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

“ பிரதேச சபையின் தவிசாளர் தனது வாகனத்தில் தெரணியகல நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, குறித்த பெண் வாகனத்தை வழிமறித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், சந்தேகநபரான பெண், முகச்சவரத்திற்கு பயன்படுத்தும் பிளேட்டினால் தவிசாளரின் மூக்கை அறுத்துள்ளார்.

எனினும் தவிசாளரும் அப்பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால் அப்பெண்ணும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துக்கு இருவருக்கும் இடையிலான சட்டவிரோத உறவே காரணமொக இருக்கலாம் என சந்தேகித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.     

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.