நெல் களஞ்சியசாலைகளுக்கு வவுனியாவில் சீல்!
வவுனியா தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில்ல அமைந்துள்ள இரு தனியார் நெற்களஞ்சியசாலைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில், உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் தகவல்களை வழங்காத குறித்த இரண்டு நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டது.
மேலும், குறித்த களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபை நிர்ணய விலையினை செலுத்தி கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை