மற்றொரு இலங்கைத் தூதுவர் இராஜினாமா!!

 


மியன்மாருக்கான இலங்கைத் தூதவராகப் பதவிவகித்து வந்த பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து அவர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்சமயம் அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக 9 மாதங்களாக கடமையாற்றிய பிரபல இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.