பாரிய தொகையை இந்தியாவிடம் கோரியுள்ளது இலங்கை!!

 


இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனைக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வாறு கடனாகத் தரும்படி இந்தியாவிடம், அரசாங்கம் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தியா கடனுதவித் திட்டத்தின் பெற்றுக்கொள்ளப்படவுள்ள இந்த கடனுக்கான நிபந்தனைகள் என்ன விதிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

வெளிநாட்டு செலாவணி இருப்பு நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால மாற்றுவழியாகவே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.