தாயும் மகனும் கொரோனாவுக்குப் பலி!!

 


பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி  மற்றும் மகன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன்,  கொரோனா தொற்றுக்கு தாய் உயிரிழந்து, 11 நாட்களில் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் உயிரிழந்த மகன், அந்த குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை எனவும், அவர் சட்டத்துறை மாணவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பொரலஸ்கமுவ – திவுல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுனிதா டி சில்வா மற்றும் 25 வயதான ட்ரிவின் டி சில்வா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகரான டிரோன் டி சில்வாவின், மனைவி மற்றும் மகனே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வாவின் மனைவி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 20ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து அவரின் மகன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் (30) உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தொற்றுக்குள்ளான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் டிரோன் டி சில்வா, கண்டி – குண்டசாலையிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்பொழுது அவர் குணமடைந்துள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், நெதிமால பொது மயானத்தில் இடம்பெற்ற மகனின் இறுதிக் கிரியைகளுக்காக, பிரதி பொலிஸ் அத்தியட்சகர் அழைத்து வரப்பட்டு, மீண்டும் குண்டசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.