நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் இராஜினாமா!!

 


நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் அமைச்சுப் பதவியிலிருந்தும், தனது தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகப் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்படவுள்ளதுடன் இதற்கான அழைப்பும் அவருக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவே அறியமுடிகிறது.

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் கடமையாற்றிவரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தில் அவருக்கு உயரிய பதவியொன்று காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் வெகுவரைவில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் மாற்றம் நிகழலாம் என அரச தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.