கேஸ் விலையை உயர்த்துமாறு கோரிக்கை!

 


சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கும்படி கேஸ் நிறுவனங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இத்தகவலை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை இன்று ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

உலக சந்தையில் கேஸ் விலை துரிதமாக அதிகரித்திருப்பதைக் காரணங்காட்டி இந்தக் கோரிக்கையை அந்நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த கோரிக்கை தற்போது கலந்துரையாடல் மட்டத்தில் இருப்பதாகவும் அமைச்சர் லசந்த அலகியவண்ண மேலும் குறிப்பிட்டார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.