வளர்ப்பு நாய்களுக்கு வரி விதிப்பு!!

 


வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கான வரியை செலுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வளர்ப்பு நாய்களுக்கு எதிர்வரும் ஆண்டு முதல் வரித் தொகையை செலுத்துவது கட்டாயமாக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனையை தான் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தம்புள்ளை மாநகர சபையின் தவிசாளர் ஜாலிய ஓபாத்தவினால், மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மாநகர எல்லைக்குள் செலுத்தப்படும் வரித் தொகையை அதிகரிப்பதற்கும் மாநகர சபைத் தவிசாளர் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் தற்போது 50 வீதமாக காணப்படுகின்ற வரித் தொகையை, 100 வீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.