588 பாடசாலைகளை கிழக்கில் திறக்கத் தீர்மானம்!

 


கிழக்கு மாகாணத்தில் தரம் 1 - 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். பிள்ளை நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள மொழி மூல 165 பாடசாலைகளையும், தமிழ் மொழி மூல 423 பாடசாலைகளையும் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதோடு, பாடசாலை வளாகம் முழுமை யாகத் துப்புரவு செய்யப்பட்ட பின்னர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் பாடசாலை கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அறிவுறுத் தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.