மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் விபத்து!!

 


செட்டிபாளயத்தில் இரவுவேளை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளயத்தில் நேற்று இரவு (19) இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து சம்பவத்தில குறித்து தெரியவருவது,  மட்டகளப்பு கல்முனை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.