அனுராதபுரம் வீதியில் விபத்து - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!


 புத்தளம் - அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் புத்தளம் - அனுராதபுரம் வீதி, அளுத்கம 18 ஆம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் சாலியவெள, பளுகஸ்ஸேகம பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எம்.சமன் அருணப்பிரிய என்ற 51 வயதான பொலிஸார் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் குறித்து தெரியவருவது,

குறித்த பொலிஸ் அதிகாரி கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் கப் ரக வாகனம் ஒன்று இவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து லொறியின் சாரதி தப்பி சென்றுள்ளார். அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கப் ரக வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.