ரியல் ஹீரோவுக்காக கண்ணீர் வடித்த மக்கள்!!

 




கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராஜ்குமார். இவரது மகனான புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இது கன்னட திரை உலகிற்கும் மற்றும் கன்னட மக்களுக்கு பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமார் ஒரு நடிகராக மட்டுமல்லாது அதையும் தாண்டி பல மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மறைவை கேட்டு அவரது ரசிகர்கள் கதறி கதறி அழுத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் புனித் ராஜ்குமாரின் மரணத்தை வாசிக்கும் போது தன்னை அறியாமலேயே கண்கலங்கி வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். இந்நிலையில் அவருடைய கண்களை அம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்ற பொழுது பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதேவேளை புனித்குமார் கிட்டத்தட்ட 15 பள்ளிக்கூடங்கள் ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக நடத்தி வருகிறார். 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 மாட்டு கொட்டாய் மற்றும் 1800 மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி கட்டணத்தையும் செலுத்தி வருகிறார்.

ஒரு சூப்பர் ஸ்டார் மகனாக இருந்தாலும் புனித் ராஜ்குமார் அனைவரிடமும் நேர்மையாகவும் எளிமையாக பழகுவார் என பல பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலுடன் புனித் குமாருடனான தங்களது மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.